search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு சலுகை"

    நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #CentralGovernment #IncomeTax
    புதுடெல்லி:

    நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடியில் முன்னுரிமை சேவை வழங்கப்படும்.

    வருமான வரியை எத்தனையோ பேர் நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். ஒழுங்காக வரி செலுத்துகிறவர்களோ, ஏமாற்றுகிறவர்களுக்கு மத்தியில் ஒழுங்காகவும், நேர்மையாகவும் நாங்கள் வரி செலுத்துவதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.



    இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, ஒழுங்காக வரி செலுத்துவோரின் நேர்மைக்கு தகுந்தபடி அவர்களுக்கு முன்னுரிமை சலுகைகள் வழங்கலாம் என யோசனை தெரிவித்தார்.

    இப்போது அது செயல்வடிவம் பெறுகிறது.

    நேர்மையாகவும், ஆண்டுதோறும் தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துகிறவர்களை அங்கீகரித்து, அவர்களை கவுரவிக்கிற வகையில், ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின்படி, விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க பரிசீலிக்கப்படுகிறது.

    இது தொடர்பான முடிவினை வருமான வரித்துறை சார்ந்த கொள்கைகளை வகுக்கிற பொறுப்பில் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் குழு விரைவில் எடுக்க உள்ளது.

    இந்த முடிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இப்படி நேர்மையாக வருமான வரி செலுத்துகிறவர்களை தனித்து அடையாளம் காட்ட ஏதுவாக அவர்களுக்கு என ஒரு சிறப்பு எண் தரலாமா அல்லது அவர்களது பான் அட்டையில் சிறப்பு குறியீடுகள் செய்யலாமா என பரிசீலிக்கப்படுகிறது. 
    கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் இனி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். இந்த நடவடிக்கையால் பட்ட வகுப்பு ஆசிரியர்கள், இனி பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “கல்லூரிகளில் உதவி பேராசிரியர் (செலக்சன் கிரேடு) பதவி உயர்வுக்கு 2021 ஜூலை மாதம் முதல் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல்கலைக்கழகங்களில் நேரடியாக உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்படுவதற்கும் முனைவர் பட்டம் 2021 ஜூலை மாதம் கட்டாயம் ஆகிறது” என்று கூறினார்.

    மேலும், பல்கலைக்கழக மட்டத்திலான ஆசிரியர்களுக்கு (அதாவது, முதுநிலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறவர்களுக்கு) கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  #PrakashJavadekar #tamilnews 
    ×